News April 5, 2025
மகாவீர் ஜெயந்தியன்று மதுபானக் கடைகள் மூட உத்தரவு

காஞ்சிபுரத்தில், வரும் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இது, தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1989 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மேற்கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 13, 2025
ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <
News April 13, 2025
கொலை வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில், கடந்த மாதம் 11ம் தேதி, ரவுடி வசூல் ராஜா 34, என்பவர், வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரவுடி தியாகுவை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட சுரேஷ்(19) மற்றும் ஜாகீர்உசேன்(25) ஆகிய இருவரையும், எஸ்.பி.,சண்முகம், பரிந்துரை படி, கலெக்டர் கலைச்செல்வி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
News April 13, 2025
காஞ்சிபுரத்தில் உதயமாகும் இரு பிர்காக்கள்

சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில், வருவாய் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், காஞ்சிபுரத்தில் புதிதாக இரண்டு பிர்காக்கள் உருவாக்கப்படும் என, தெரிவித்தது. காஞ்சிபுரம் பிர்காவை பிரித்து, செவிலிமேடு மற்றும் விஷ்ணுகாஞ்சி என, இரண்டு பிர்கா உருவாக்க, வருவாய் துறையினர், கருத்துரு அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் பிர்காவை பிரிக்க வருவாய் துறையினர் நீண்ட நாட்களாக கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.