News April 5, 2025

பிரியாணி, ஷவர்மாவால் பாதிப்பு: மக்கள் அச்சம்

image

சென்னையில், கடந்த சில நாட்களாக ஹோட்டல்களில் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி பிலால் ஹோட்டல், நேற்று சிந்தாதிரிப்பேட்டை ஷவர்மா கடை என அடுத்தடுத்த கடைகளில் சுகாதாரம் இல்லாமல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், ஹோட்டல்களில் சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 9, 2025

சென்னையை அலறவிட்ட கொலை.. திடுக் திருப்பம்

image

சூளைமேட்டைச் சேர்ந்தர் முகில். இவர் நேற்று குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது அண்ணன் ராஜபிரபா, முகில் கழுத்தை அறுத்து கொலை செய்தார். ஆனால், முகிலை கொன்றது தாய் பிரமிளா என சரணடைந்த நிலையில், ராஜபிரபா அளித்த வாக்குமூலத்தில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் இருப்பதால் தாய் பழி ஏற்றியதாக கூறினார். பின் ராஜ பிரபாவை கைது செய்தனர்.

News August 9, 2025

சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனை

image

சென்னை தி.நகர் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி உள்ள மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர்.

News August 9, 2025

சென்னையில் 15% சாலை விபத்துகள் குறைவு

image

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15 சதவீதம் ஆக தடுக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!