News April 5, 2025

சங்கரன்பந்தல்: சுகாதார நிலையத்தில் ஆண் சடலம்

image

மயிலாடுதுறை, சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தனியாக இருந்த கழிவறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 13, 2025

மயிலாடுதுறை: பயிா் சேதம் கணக்கெடுப்பு பணி ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களின் சேதம் குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் விஜயராகவன் நேரில் ஆய்வு செய்தார். இதில் 14 உதவி வேளாண்மை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் வயலை கணக்கெடுப்பில் சேர்க்க உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 13, 2025

மயிலாடுதுறை: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart என்ற இணையதளத்தின்<<>> மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 13, 2025

மயிலாடுதுறை: காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட பொது மக்கள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இணையதளத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர வேண்டாம். மேலும் சமூக ஊடக கணக்குகளை பலப்படுத்த பிரைவசி செட்டிங் ஐ பயன்படுத்த வேண்டும், உங்கள் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளில் இடம் (LOCATION) பதிவு செய்யும் அம்சத்தை முடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!