News April 5, 2025
மணிப்பூரில் அமைதி திரும்புமா?

குக்கி -மெய்தி இன பிரதிநிதிகள் இன்று டெல்லியில் நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். இரு தரப்பினரிடையே மத்தியஸ்தம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த பல கட்ட முயற்சிகளின் விளைவாக இன்றைய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மணிப்பூரில் 2023ல் தொடங்கிய கலவரத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்.13 முதல் அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
Similar News
News April 6, 2025
இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியா, இலங்கை இடையே முதல்முறையாக பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மோடி, திசநாயகே ஆகியோர் இடையேயான சந்திப்பிற்கு பிறகு, 2 நாடுகளும் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதில் திரிகோணமலையை எரிசக்திக்கான மையமாக மாற்றும் ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும். திரிகோணமலையில் உள்ள திரிகோணஸ்வர் கோயிலை புனரமைக்க இந்தியா உதவும் என மோடி அறிவித்தார்.
News April 6, 2025
ஏப்ரல் 7 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்

பாம்பன் புதிய பாலத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பதைத் தொடந்து, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பாம்பன் பாலத்தின் வேலைகள் நடைபெற்று வந்ததால், ரயில்கள் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் சேது உள்ளிட்ட ரயில்கள் ராமேஸ்வரம் வரை செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News April 6, 2025
ராசி பலன்கள் (06.04.2025)

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – முயற்சி ➤கன்னி – லாபம் ➤துலாம் – நன்மை➤விருச்சிகம் – சுகம் ➤தனுசு – பரிசு ➤மகரம் – சாந்தம் ➤கும்பம் – யோகம் ➤மீனம் – அமைதி.