News April 5, 2025

ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

image

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News January 2, 2026

‘ஜனநாயகன்’ டிக்கெட் வாங்க ரெடியா?

image

ஜன. 9-ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், நாளை டிரெய்லர் வெளியாகவுள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் 4-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு, மற்ற மாநிலங்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2026

FLASH: 2,700 பேர் மரணம்

image

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு முன் யாராலும் தப்ப முடியாது. 2025-ல் இயற்கை சீற்றங்களால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரத்தை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓராண்டில் மட்டும் 2,760 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், புயல், கனமழை, வெப்ப அலை என அதிதீவிர வானிலை நிகழ்வுகளே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News January 2, 2026

செல்லூர் ராஜுவை முந்திவிட்டார் KAS: சாமிநாதன்

image

விஜய்யை CM பதவியில் அமர வைப்பதே தனது இலக்கு என செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், காங்கேயத்தில் இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன், விஜய்யை நிரந்தர முதலமைச்சர் ஆக்குவேன் என செங்கோட்டையன் கூறி வருவது சிறந்த நகைச்சுவை என்று விமர்சித்துள்ளார். காமெடி செய்வதில் செங்கோட்டையன், செல்லூர் ராஜுவை பின்னுக்கு தள்ளிவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!