News April 5, 2025

இந்தியாவில் புதிய சட்டம் அமலானது

image

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா 2025-க்கு குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இது தற்போது சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தின் படி, ஒருவர் தெரிந்தே போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது, தங்குவது, வெளியேறுவது கண்டறியப்பட்டால் இனி 7 ஆண்டு சிறை, ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விமானங்கள், கப்பல்கள் வெளிநாட்டு பயணிகளின் தகவல்களை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

Similar News

News September 19, 2025

அரைமணி நேரத்தில் விஜய் பேச்சை முடிக்க நிபந்தனை

image

திருச்சியை போல நாகையிலும் 23 நிபந்தனைகளுடன் விஜய்யின் பிரசாரக் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. அரைமணி நேரம் மட்டுமே விஜய் பேச வேண்டும், விஜய்யின் வாகனத்தை பின் தொடரக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை போலீஸ் விதித்துள்ளது. தவெகவின் கோரிக்கையை ஏற்று புத்தூர் அண்ணா சிலை அருகே பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி கொடுத்துள்ளது. பிரசாரம் குறித்து நேற்று <<17749723>>கோர்ட் <<>> தவெகவுக்கு எச்சரிக்கையும் கொடுத்திருந்தது.

News September 19, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை இன்று(செப்.19) ஒரே நாளில் கிராமுக்கு 2 அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் 1 கிராம் ₹143-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,43,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரும் நாள்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 19, 2025

போனில் Bank App யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை…!

image

அனைவரும் ஃபோனில் பேங்க் ஆப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு இல்லை. இந்த விஷயங்களை செய்தால் பேங்கில் உள்ள உங்கள் பணம் திருடுபோகாமல் தடுக்கலாம். ➤பொது வெளியில் இருக்கும் Wifi-ல் பேங்கிங் ஆப்-ஐ பயன்படுத்த வேண்டாம் ➤செல்போனை சர்வீஸுக்கு கொடுக்கும்போது பேங்கிங் ஆப்-ஐ Uninstall செய்யுங்கள் ➤அனைத்திற்கும் ஒரே பாஸ்வேர்டை வைக்காதீங்க. SHARE.

error: Content is protected !!