News April 4, 2025
நாகை: ராஜராஜ சோழனின் புத்த மடாலயம்

நாகையில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பழங்கால கட்டடம் ஒன்று இடித்து, மரத்தை வெட்டியதன் விளைவாக, 1930ல் சுமார் 50க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டன. அதில், கல்வெட்டொன்றில் கி.பி. 1006ல் ராஜராஜ சோழனால் சூடாமனி விஹாரமென்ற இப்புத்த மடாலயம் கட்டப்பட்டது என்பது தெரியவந்தது. பின் இச்சிலைகள் சென்னை மும்பை உட்பட உலகெங்கும் 14 அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
Similar News
News November 5, 2025
விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.256.67 கோடி வரவு வைப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 03.09.2025 முதல் 04.11.2025 வரை 23,146 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.256.67 கோடி அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்முதல் பணிகள் முழுவடிவம் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
நாகை எஸ்.பி அலுவலகத்தில் 17 மனுக்களை பெற்ற எஸ்.பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், எஸ்பி சு. செல்வகுமார் பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து 17 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
News November 5, 2025
நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

நாகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


