News April 4, 2025
திருவாரூரில் இப்படி ஒரு இடமா?

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாகும். முத்துப்பேட்டையில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சை அதிராம்பட்டினத்தில் தொடங்கி நாகை கோடியக்கரை வரை நீண்டுள்ளது. கடந்த வருடம் இந்த அலையாத்திக் காடுகள் நடுவே வனத்துறை சார்பில் ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்கள் வடிவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..
Similar News
News April 18, 2025
தியாகி களப்பால் குப்புசாமியின் நினைவு தினம் இன்று …

திருவாரூர் மாவட்டம், களப்பால் கிராமத்தில் அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்த ஏழை விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த இவர், தொடர் போராட்டங்களை முன்னெடுத்து, தூக்கு தண்டனை பெற்று உடல்நலக்குறைவால் திருச்சி சிறையில் உயிரிழந்தார். திருவாரூர் மண்ணின் மைந்தர் களப்பால் குப்புசாமியின் 77-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! SHARE.
News April 18, 2025
திருவாரூர்: ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News April 18, 2025
திருவாரூர்: ரேஷன் புகார் அளிக்க சிறப்பு எண்

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, உங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04366 220510, 9445000295 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.