News April 4, 2025

சோனியா காந்தியை சாடிய மக்களவை சபாநாயகர்

image

வக்ப் வாரிய மசோதா ஜனநாயகத்தை தகர்த்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில் முறையான விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு பின்னரே மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் மூத்த தலைவர் ஒருவர் விதிமுறைகளை பின்பற்றிவில்லை என பேசுவது துரதிஷ்டவசமானது எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

Similar News

News November 3, 2025

BREAKING: நாடு முழுவதும் ₹3,000 ஆக உயர்கிறது

image

பிஎப் உச்சவரம்பை EPFO உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பிடிக்க உள்ள சம்பள உச்ச வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தவும், வரும் டிசம்பர் / ஜனவரி முதல் இது அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மணி கன்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி நடந்தால், தற்போது ₹1,800 (12%) ஆகவுள்ள அதிகபட்ச பிஎப் பிடித்தம், ₹3,000 ஆக உயரும். இதனால் பணியாளரின் பிஎப் தொகை அதிகரிக்கும்.

News November 3, 2025

‘இபிஎஸ்-க்கு நோபல் பரிசு’

image

தமிழகத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டி, மக்களாட்சியை கொண்டுவர EPS முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். ஜனநாயகத்தை வளர்க்க அவர் பாடுபட்டு வருகிறார் என்றும் இதற்காக அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் அவர் சிபாரிசு செய்துள்ளார். முன்னதாக, துரோகத்துக்கான நோபல் பரிசு EPS-க்கு கொடுக்கவேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதை பற்றி உங்கள் கருத்து?

News November 3, 2025

இந்தியாவின் அண்டை நாடுகள் அணு ஆயுத சோதனை

image

சீனாவும், பாகிஸ்தானும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை குறிப்பிட்டு, அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதை வெளிப்படையாக அறிவித்ததை நியாயப்படுத்தியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தான் குறுக்கிடவில்லை என்றால் பல உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!