News April 4, 2025
8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News April 18, 2025
OTTக்கு வரும் ‘வீர தீர சூரன்’.. பாக்க ரெடியா..

பல தடைகளை தாண்டி வெளியான விக்ரமின் ‘வீர தீர சூரன்’ -2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு இரவில் நடக்கும் கதையில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்டோரின் மாறுபட்ட நடிப்பு மக்களை கவர்ந்தது. திரையில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது OTT-க்கு வருகிறது. வரும் 24-ம் தேதி அமேசான் பிரைம் OTT-யில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News April 18, 2025
வார விடுமுறை கேட்டு மனு

மக்களுக்காக அயராது உழைக்கும் போலீசுக்கு நாள் கிழமை கிடையாது, நேரம் காலம் கிடையாது, விடுமுறையை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதனை மாற்றும் வகையில், போலீசுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும் என்று 2021ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு, ஐகோர்ட்டில் காவலர் ஒருவர் மனு அளித்திருக்கிறார்.
News April 18, 2025
வங்கதேசத்தின் மூக்கை உடைத்த இந்தியா!

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக மே.வங்கத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மைனாரிட்டி முஸ்லிம்களை காக்க இந்தியா நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேசம் வலியுறுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, முதலில் அங்குள்ள மைனாரிட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள், தேவையின்றி மூக்கை நுழைக்காதீர்கள் என பதிலடி தந்துள்ளது.