News April 2, 2024

டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டு கொலை

image

டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி, டிடிஆரை கீழே தள்ளிவிட்டதில் டிடிஆர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 1, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

image

மாதத்தின் முதல் நாளான இன்று(நவ.1) தங்கம் உயர்வுடன் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹11,310-க்கும், சவரன் ₹90,480-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹166-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது: EPS

image

கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர்; தற்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நெருஞ்சில் முள்ளாக இருந்த சிலரை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், அவர்களாகவே தவறு செய்துவிட்டு, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்து கொண்டு வெளியேறி விட்டனர். இனி அவர்கள் அனைவரும் நம்முடைய எதிரிகள்தான் என்று செங்கோட்டையனை மறைமுகமாக குறிப்பிட்டார்.

News November 1, 2025

நாடு முழுவதும் ஆதார் கட்டணம் உயர்ந்தது

image

நாடு முழுவதும் இன்று முதல் ஆதார் கட்டணம் உயர்கிறது. *பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை புதுப்பிக்க இனி ₹75 வசூலிக்கப்படும் (முன்பு ₹50) *கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க ₹125 கட்டணம் (முன்பு ₹100), *வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளை பெற, முதல் நபருக்கு ₹700 & அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ₹350 கட்டணம் வசூலிக்கப்படும்.

error: Content is protected !!