News April 4, 2025

பசு சாணம் மூலம் ₹400 கோடி வருமானம்!

image

உலகளவில் பசு சாணத்திற்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பசு சாணம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில், பனை மரங்களை வளர்க்க பசுவின் சாணப் பொடியை பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பல பொருட்களைத் தயாரிக்க பசுவின் சாணம் பயன்படுவதால் இதன்மூலம் ₹400 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 18, 2025

திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

image

கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி பி.தியாகராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்த தியாகராஜன் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

News April 18, 2025

அண்ணா யுனிவர்சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சல்லடை போட்டு சோதனையிட்டனர். இறுதியில் வெறும் புரளி என தெரியவந்தது. இமெயிலில் மிரட்டல் விடுத்த நபர் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 18, 2025

புனித வெள்ளி (Good Friday) கொண்டாடப்படுவது ஏன்?

image

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாகவும் கடைப்பிடிக்கிறோம். புனித வெள்ளியில் (Good Friday) இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்கிறோம். பகைவர்களை நேசிக்க சொன்ன இயேசு கிறிஸ்து, மனித குலத்தின் பாவங்களை மன்னிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டார்.

error: Content is protected !!