News April 4, 2025

இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ட்விஸ்ட் 

image

செய்யாறு கண்ணியம் நகரைச் சேர்ந்த ஜெமினி(22) மார்ச் 28 அன்று கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில், சுனிலை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஜெமினியுடன் முன்விரோதம் காரணமாக திலீப்குமார் உள்ளிட்டோர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் வெளியான போதை ஊசி தகராறு செய்தி தவறானது என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். 

Similar News

News April 18, 2025

இலவச கோடை கால விளையாட்டுப் பயிற்சி

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. ஏப்.24 -ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டை மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றை நேரில் கொண்டு பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் அலுவலரை 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

News April 18, 2025

வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

image

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)

News April 17, 2025

கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

image

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!