News April 4, 2025
நாங்குநேரி பெயர் காரணம் தெரியுமா ?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒர் பழமையான ஊராகும். இங்குள்ள பெரிய குளத்தில் நடுவே வானமாமலை பெருமாள் தோன்றியதாக ஐதீகம். பெருமாளுக்கு நாங்கன், நாராயணன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஏரியில் நாங்கன் உதித்த இடம் என்பதால் இவ்வூர் நாங்கனேரி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மருவி நாங்குநேரி என ஆனது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நாங்குநேரி ஊருக்கு சென்று பழமையான நாங்கனை தரிசித்து வாருங்கள்.
Similar News
News April 18, 2025
நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.
News April 18, 2025
ஜாகிர் உசேன் கொலை; 4 பேர் மீது குண்டாஸ்

நெல்லை டவுன் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக், அக்பர்ஷா பீர் முகம்மது, கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.