News April 4, 2025
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம்: மோடி

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்புமுனை தருணம் என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேடல் இது. நீண்ட காலமாக குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரு வலுவான, இரக்கமுள்ள, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜன.5-ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், அன்றைய நாளே 3-ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் & நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புத்தகங்கள் வழங்கப்பட்ட பிறகு அவற்றை ‘Emis’ தளத்தில் பதிவேற்றவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 31, 2025
உலக பேரழிவை ஏற்படுத்திய இந்த நாளை மறக்க முடியுமா?

சரியாக 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (2019 டிச.31) சீனாவின் வுகான் மாகாணத்தில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அடையாளம் காணப்படாத நிமோனியா தொற்றால் மக்கள் அதிகளவில் அட்மிட் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் கடல்கள், மலைகள், நாடுகளை தாண்டி அந்த தொற்று பரவியது. கோவிட்-19 என பெயர் பரிமாற்றம் பெற்று, உலகம் முழுவதும் எண்ணிலடங்கா உயிர்களை பறித்தது. #Remembering Disaster.
News December 31, 2025
அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ அரசியல் படமா என்ற கேள்விக்கு, இயக்குநர் H வினோத் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். கமர்ஷியல் படமாக இருந்தாலும் படத்தில் அரசியல் சார்ந்த பல அம்சங்களை வினோத் அதில் சேர்த்துள்ளாராம். அரசியல் கருத்துகளை படத்தில் வைக்க தயாரிப்பாளர் உறுதுணையாக இருந்ததாகவும், அவரே பல அரசியல் நிகழ்வுகளை சேர்க்க ஐடியாவும் கொடுத்துள்ளதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.


