News April 4, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வரும் 11-ந்தேதி அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!

Similar News

News April 7, 2025

நாகை: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.5,000

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் பதிவு செய்யும் காலம் ஏப்.15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதென கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு<<-1>> இங்கே க்ளிக்<<>> செய்யவும்.

News April 7, 2025

நாகை: மீனவர்களின் நெகிழ்ச்சிகர செயல்

image

நாகை, கோடிக்கரையிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று காலை கடலுக்கு சென்றனர். அப்போது கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து விட்டு திரும்பி வரும்போது கடலில் துண்டான மீன்பிடி வலையில் ஆலிவ் ரிட்லி ஆமை அகப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக ஆமை சிக்கொண்டிருந்த வலையை வெட்டி ஆமையை விடுவித்தனர். இந்நிலையில் இதனையறிந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீனவர்களை பாராட்டினர்.

News April 6, 2025

நாகை: கர்ம வினை தீர்க்கும் காயாரோகணேஸ்வரர்

image

நாகப்பட்டினத்தில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சென்று மூலவரான காயாரோகணேஸ்வரரை வழிப்பட்டால் வாழ்வின் கர்ம வினைகள் என்று சொல்லக் கூடிய தற்போதைய மற்றும் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சஞ்சலங்களும் இன்றி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்பது ஐதீகம். கர்ம வினைகள் நீங்குவதற்கு இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!