News April 4, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வரும் 11-ந்தேதி அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!

Similar News

News March 8, 2026

நாகை: திமுகவில் இணைந்த அதிமுக-வினர்

image

நாகை மாவட்டம், குறிச்சி ஊராட்சி ஆய்மலை கிராமத்தில் அதிமுக முன்னாள் கிளைக் செயலாளர் பிரசாத் தலைமையில், அக்கட்சியில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் விலகி திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் க.ராஜேந்திரன் தலைமையில் திமுக-வில் நேற்று இணைந்தனர். இதையடுத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

News March 8, 2026

நாகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 2025-26-ம் ஆண்டு சம்பா பருவத்தில் மாவட்டம் முழுவதும் 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை 81 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 24 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.187 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவிந்து உள்ளார். SHARE

News March 8, 2026

நாகை: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தல்.. போலீசார் அதிரடி

image

நாகை ரயில் நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரயில்களில் சோதனை செய்தப்போது காரைக்கால்- வேளாங்கண்ணி இடையே சென்ற பயணிகள் ரயிலில் சந்தேகத்துக்கு இடமாக கிடந்த 8 பைகள் கிடந்துள்ளது. இதனை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!