News April 4, 2025
இதுவரை 55 பேருக்கு பாதிப்பு

திருவல்லிக்கேணி பகுதியில், பிரபலமான ‘ஹோட்டல் பிலால் பிரியாணி’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரம்ஜானுக்கு (மார்.30) முந்தைய நாள் இங்கு பீப், ஷவர்மா, பிரியாணி உள்ளிட்டவற்றை சாப்பிட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 55 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 21, 2025
சென்னையில் ரூ.158 கோடிக்கு மது விற்பனை

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.158 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
News October 21, 2025
BREAKING: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வந்ததால், முதல்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டள்ளது. இதனால், அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 அடிஉயரம் கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.20 அடிக்கு நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 21, 2025
BREAKING: செம்பரபாக்கம் ஏரி இன்றே திறப்பு?

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரபாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 1110 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விரைவில் முழுகொள்ளளவான 24 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு பிறகு 100 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.