News April 4, 2025
ஏப்ரல் 04: வரலாற்றில் இன்று

*1855 – தமிழறிஞர் மனோன்மணீயம் சுந்தரனார் பிறந்தநாள். *1905 – ஹிமாச்சலப் பிரதேசம், காங்ரா, தரம்சாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர். 1972 – காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் இறந்த தினம். *1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆலன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. *1976 – நடிகை சிம்ரன் பிறந்தநாள். *1979 – ‘ஜோக்கர்’ புகழ் கீத் லெட்ஜர் பிறந்தநாள்.
Similar News
News April 12, 2025
பிரபல பாடகர் கரிசல் கிருஷ்ணசாமி காலமானார்

பிரபல நாட்டுப்புற இசைக் கலைஞர் கரிசல் கிருஷ்ணசாமி(66) உடல்நலக்குறைவால் காலமானார். நெல்லையை சேர்ந்த இவர் வானொலி, திரைப்படங்கள் மற்றும் முற்போக்கு இயக்க மேடைகளில் சமூக கருத்துடைய பல பாடல்களை பாடி மக்களின் மனங்களை வென்றதால் கரிசல் குயில் கிருஷ்ணசாமி என அழைக்கப்பட்டார். இவரது மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், மதுரை MP சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP
News April 12, 2025
பிரதமரிடம் கருத்து கூற விருப்பமா? ஃபோனை எடுங்க!

PM மோடியிடம் உங்களது கருத்துகளை பகிர விரும்புகிறீர்களா? புதிய சிந்தனை மூலம் தேசத்திற்கு உதவ விரும்புகிறீர்களா? அப்படியெனில் MyGov.in அல்லது 1800 11 7800 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழையுங்கள். ஏப்.25 ஆம் தேதி வரை தொலைபேசி இணைப்புகள் உங்களுக்காக காத்திருக்கும். உங்களது சிந்தனைகள், யோசனைகளை ஏப்.27 ஆம் தேதி அன்று மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் PM மோடி நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்வார்.
News April 12, 2025
என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதை அடுத்து, ராமதாஸை சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். ஆனால், அன்புமணியை சந்தித்துவிட்டு வந்தவர்களை அவர் காண மறுத்து வருகிறார். இதனால் தைலாபுரத்தில் காத்திருந்த மூத்த நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர். இந்தச் சூழலில் பாமகவிற்கு தானே தலைவர், தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ராமதாஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.