News April 2, 2024
கொலை மிரட்டல் விடுத்தாரா சரண்யா பொன்வண்ணன்?

நடிகை சரண்யா பொன்வண்ணன் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்ததில், பொய் புகார் என தெரியவந்துள்ளது. பார்க்கிங் தொடர்பாக சரண்யாவின் உறவினருக்கும் ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தம் இல்லாமல் சரண்யா மீது புகார் அளித்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
Similar News
News January 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 569
▶குறள்:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
▶பொருள்: நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்
News January 3, 2026
விஜய்க்கு தான் கெடுதல்: தமிழிசை

NDA கூட்டணியில் விஜய் சேர வேண்டுமென மீண்டும் ஒருமுறை தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார். அனுமானங்களின் அடிப்படையிலேயே விஜய் பலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அனுபவம், ஆட்சியின் அடிப்படையில் பலமாக இருக்கும் தங்களுடன்(NDA கூட்டணி) விஜய் சேர்ந்தால் நல்லது என்றும், இல்லையெனில் அது அவருக்கு தான் கெடுதல் எனவும் தமிழிசை கூறியுள்ளார். விஜய் வராவிட்டாலும் தங்களுக்கு பிரச்னையில்லை என அவர் குறிப்பிட்டார்.
News January 3, 2026
இறுதி ஆண்டு படிக்கும் போதே ₹2.5 கோடி சம்பளம்!

IIT ஹைதராபாத்தில் கம்பியூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ், இறுதி ஆண்டு படிக்கும் போதே ஆண்டுக்கு ₹2.5 கோடி சம்பளத்தில் வேலையை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் IIT ஹைதராபாத்தில் படித்து அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த மாணவர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச டிரேடிங் நிறுவனமான ‘Optiver’ இந்த ஆஃபரை வழங்கியுள்ளது. வரும் ஜூலையில் அவர் பணியில் சேர உள்ளார்.


