News April 4, 2025
அந்த வீரனுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..

குஜராத்தில் நேற்று நள்ளிரவு இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த லெப்டினன்ட் சித்தார்த் யாதவ் (28) உயிரிழந்தார். இவருக்கு 10 நாள்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், அநியாயமாக உயிர் பறிபோயுள்ளது. சித்தார்த்தின் பூட்டன், தாத்தா, அப்பா என அவரது குடும்பமே ராணுவ சேவை செய்தவர்களாவர்.
Similar News
News April 14, 2025
தவறை திருத்தி LSG-ஐ வீழ்த்துமா CSK

லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் LSG அணியை CSK இன்று எதிர்கொள்கிறது. பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருவதால் தொடர்ந்து 5 போட்டிகளில் CSK தோல்வியடைந்தது. இன்றை போட்டி மிக முக்கியமானது என்பதால், CSK தனது தவறை சரி செய்துக்கொண்டு இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் தகுதிச் சுற்றுக்கு செல்ல அடுத்த வரும் அனைத்து போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
News April 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
குறள் இயல்: துறவறவியல்
அதிகாரம்: வெகுளாமை.
குறள் எண்: 306
குறள்: சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும், ஏமப் புணையைச் சுடும்.
பொருள்: சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
News April 14, 2025
சாதி தீண்டாமைக்கு எதிராக இன்று உறுதிமொழி

இன்று அனைத்து மாவட்டக் கழக அலுவலகங்களிலும் “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்று அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என திமுக உத்தரவிட்டுள்ளது. சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம். சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் எனவும் உறுமொழி எடுக்க அறிவுறுத்தியுள்ளது.