News April 4, 2025
அந்த வீரனுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..

குஜராத்தில் நேற்று நள்ளிரவு இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த லெப்டினன்ட் சித்தார்த் யாதவ் (28) உயிரிழந்தார். இவருக்கு 10 நாள்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், அநியாயமாக உயிர் பறிபோயுள்ளது. சித்தார்த்தின் பூட்டன், தாத்தா, அப்பா என அவரது குடும்பமே ராணுவ சேவை செய்தவர்களாவர்.
Similar News
News August 13, 2025
அதிமுக கூட்டணியில் டிடிவி? இபிஎஸ் தடாலடி பதில்

மைத்ரேயன் அதிமுகவில் இருந்து வெளியேறியது உள்கட்சி விவகாரம்; அதை வெளியே சொல்ல முடியாது என்று இபிஎஸ் பதிலளித்துள்ளார். மேலும், ஒரே மேடையில் TTV, EPS இணைவார்கள் என நயினார் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, என்னிடம் ஏன் கேக்குறீங்க.. அதை அவரிடமே (நயினார்) கேளுங்க எனக் கூறிய அவர், யாரை சந்திப்பது என்று முடிவெடுக்க வேண்டியது நாங்கள்தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
News August 13, 2025
தீவிரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இருப்பினும், இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ‘ஆபரேஷன் அகல்’-ன் ஒரு பகுதியாக உரி பகுதியை சுற்றி வளைத்து ராணுவம் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளது.
News August 13, 2025
இந்தியாவுக்கு ₹15 லட்சம் கோடி இழப்பை தடுத்த ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளது USA. இந்நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிய வகையில் இந்தியாவுக்கு 2022 மே – 2025 மே வரை ₹1.49 லட்சம் கோடி சேமிப்பு ஆகியுள்ளதாம். ஒருவேளை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லையென்றால், ₹15.29 லட்சம் கோடி இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.