News April 3, 2025

மதுரை:மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. மாநில அளவிலான விருது பெரும் வட்டார அளவிலான கட்டமைப்புக்கு 5 லட்சம்,ஊராட்சி அளவிலான கட்டமைப்புக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். குழு ஆய்வு செய்து மாநில மாவட்ட விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.SHARE

Similar News

News March 19, 2026

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மதுரை மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

மதுரை: பங்குனி மாத கோடை வசந்த உற்சவம் 23-ல் தொடக்கம்

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்திற்கான கோடை வசந்த உற்சவம் மார்ச்.23 அன்று தொடங்கி மார்ச்.31 வரை நடைபெற உள்ளது. விழாவில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தினமும் மாலை சித்திரை வீதியில் வலம் வந்து தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பல பள்ளியில் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பர். மேலும் பங்குனி உத்திரத்தில் சுவாமி புறப்பாடு ஏப்.1 அன்று நடைபெற உள்ளது.

News March 19, 2026

திருமங்கலம்: விபத்தில் 18 பேர் பலி; 6 ஆண்டுகள் சிறை

image

விருதுநகர் அருகே பாலவனத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்த 18 பேர் கடந்த 2009-ல் ராமநாதபுரத்திற்கு கட்டிட வேலைக்காக மினி வேனில் சென்றனர். அப்போது திருமங்கலம் அருகே பரம்புபட்டியில் சென்ற போது மினி வேன் மீது பஸ் மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் விருதுநகரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாலமுருகனுக்கு நேற்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!