News April 3, 2025
அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி – ஆட்சியர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் (ம) பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ரஞ்சீத் சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
தேனி: குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்

தேனியை சேர்ந்த வெங்கடேசன் (49), ஜான்சிராணி தம்பதியருக்கு 3 மகள்களும், 2 வயதில் மகனும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜான்சிராணி தனக்கு ஆண் குழந்தை பிறந்தது முதல் நேரம் சரியில்லை என கூறி கடந்த 31.ம் தேதி தன் 2 வயது குழந்தையை கழுத்தில் கயிறை கட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு.
News April 3, 2026
தேனி: குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்

தேனியை சேர்ந்த வெங்கடேசன் (49), ஜான்சிராணி தம்பதியருக்கு 3 மகள்களும், 2 வயதில் மகனும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜான்சிராணி தனக்கு ஆண் குழந்தை பிறந்தது முதல் நேரம் சரியில்லை என கூறி கடந்த 31.ம் தேதி தன் 2 வயது குழந்தையை கழுத்தில் கயிறை கட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு.
News April 3, 2026
தேனி: வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு

தேவாரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகர்-கவிதா. கவிதா வெளியூரில் தங்கி வேலை செய்து வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவிதா ஊருக்கு வந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் அவர் கோபித்து கொண்டு பெற்றொர் வீட்டுக்கு சென்றார். நேற்று கணவர் சமாதானம் செய்ய முயன்ற போது கவிதா போலீசில் புகார் செய்ய சென்றதால் சந்திரசேகர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் காயமடைந்த அவர் தேனி GH-ல் அனுமதி.


