News April 3, 2025
பிலால் ஹோட்டல் விவகாரம் – இதுவரை 55 பேர் பாதிப்பு

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டதால் இதுவரை 55 பேரின் உடல்நலம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 55 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Similar News
News April 3, 2026
சென்னை: பாலியல் தொழில் நடத்தியவர் கைது

சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன் தினம் காலை, பார்க் டவுன், வால்டாக்ஸ் ரோடு அருகிலுள்ள குழந்தை தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அதை நடத்திய தங்கும் விடுதியின் மேலாளர் பார்க் டவுன் குழந்தை தெருவை சேர்ந்த வீரமணி (37) என்பவரை கைது செய்தனர்.
News April 2, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (02.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 2, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (02.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


