News April 3, 2025

வயலூர் முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு

image

பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வளர்பிறை சஷ்டி நாட்களில் முருகனை வழிபட்டால் நீண்ட காலமாக தீராத பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று வயலூர் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சென்றனர். SHARE NOW!

Similar News

News March 8, 2026

திருச்சி: சோசலிஸ்ட் பார்ட்டி திமுகவிற்கு ஆதரவு

image

சோசலிஸ்ட் பார்ட்டி இந்தியா கட்சியின் தேசிய செயலாளர் தமிமுல் அன்சாரி, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் சோசலிஸ்ட் பார்ட்டி இந்தியா கட்சியின் ஆதரவை திமுகவிற்கு அளிப்பது என முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். மேலும், திமுக தலைமையிலான கூட்டணி அமோக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் கூறினார்.

News March 8, 2026

திருச்சி: கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் பட்டியல் வெளியீடு

image

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் அறிந்துகொள்ளலாம். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை லால்குடியை சேர்ந்த மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

News March 7, 2026

திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!