News April 3, 2025

துற்சக்திகளை நீக்கும் அம்பை காளி

image

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் இந்த காளி கோயில் உள்ளது. புதுச்சேரியில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், வட இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது காளி தலமாக விளங்குகின்றது. அரக்கனை கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட இங்கு அதிலிருந்து நிவர்த்தி பெற்றார். வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும் என்று கூறப்படுகின்றது.

Similar News

News April 14, 2025

புதுவை மக்களுக்கு உள்துறை அமைச்சர் வாழ்த்து

image

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் மூத்த குடி என்ற பெருமை கொண்ட தமிழ் குடிமக்கள் தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்டவர்கள். தமிழ் மக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட எனது மனமார்த்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள், என்றார்.

News April 13, 2025

சங்கடங்கள் நீக்கும் சாரம் முருகன் கோயில்

image

புதுவையில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று சாரம் முருகன் கோயில். தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனை, மற்ற நாட்களில் வழிபடுவதை விட தமிழ் புத்தாண்டில் வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!