News April 3, 2025

தோஷம் நீக்கி குழந்தை வரம் அருளும் நாகராஜர்

image

நாகர்கோவில் நகரில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆலயம் நாகராஜா கோயில். இங்கு, நாகராஜரை வணங்குவோர் நோய், நொடியின்றி நலம் பெற்று வாழ்வார்கள் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் என்றும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத தோல் தொடர்பான நோய் நீங்கிவிடுகிறது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நாக தோஷம் உள்ளவர்கள் மற்று குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க

Similar News

News April 14, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 7944 பேர் கணக்கு தொடங்கினர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஒரு நிதி ஆண்டுக்கு 250 முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு 7,944 பேர் கணக்குத் தொடங்கியுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 13, 2025

இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE

News April 13, 2025

மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலாகிறது. ஆண்டு தோறும் மீன்கள் இனப்பெருக்க காலம் கடைபிடிக்கப்படும். மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.

error: Content is protected !!