News April 3, 2025

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு!

image

மே.வங்கத்தில், 25,000 பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவை கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மம்தா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்ஜெய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது. மேலும், நேர்மையான முறையில் ஆசிரியர் நியமனத்தை 3 மாதங்களுக்குள் புதிதாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 28, 2025

ரேஷன் கார்டு ரத்து… உடனே இதை செய்யுங்க!

image

ஆதார் மற்றும் ரேஷன் அட்டை விவரங்களை சரிபார்க்கும் e-KYC முறையை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, TNPDS போர்ட்டலில் உள்நுழைந்து → e-KYC என்பதை கிளிக் செய்து → ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும் → பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP-ஐ உள்ளிடுங்கள். ஆக.31-க்குள் இதை செய்யவில்லை எனில் உங்கள் ரேஷன் கார்டு செயலிழக்கலாம். SHARE.

News August 28, 2025

இந்தியா இதை மட்டும் செய்தால் நாளையே 25% வரி ரத்து: USA

image

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான வரி 25% குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார். இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் தங்களது வருமானம், வேலைகளை இழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனாவை வர்த்தக கூட்டாளியாக பார்ப்பதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 28, 2025

உயிரிழந்த தவெக தொண்டர்… உதவிக்கரம் நீட்டிய தலைமை

image

விபத்தில் உயிரிழந்த தொண்டரின் குடும்பத்திற்கு தவெக தலைமை நிதியுதவி அளித்துள்ளது. மதுரை மாநாட்டில் பங்கேற்ற தஞ்சையை சேர்ந்த ஜெயசூர்யா வீடு திரும்பும் போது உயிரிழந்தார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி, கூடுதல் உதவிகளை செய்ய தயார் எனவும் உறுதியளித்தனர்.

error: Content is protected !!