News April 3, 2025
திருவண்ணாமலையில் வெப்பநிலை அதிகரிக்கும்

தி.மலை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும். இந்நிலையில், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கவும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். *பாதுகாப்பா இருங்க மக்களே. நண்பர்களையும் எச்சரியுங்கள்*
Similar News
News November 2, 2025
திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.1) இரவு 10 மணி முதல் இன்று (நவ.2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
திருவண்ணாமலை: வீடுகளின் மீது அடுத்தடுத்து கற்கள் வீச்சு!

செய்யாரில் டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோவில், தெருவில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் 8 வீடுகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதும் கற்கள் தொடர்ந்து விழுந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
News November 1, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – எம்.பி. பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (நவ.01) “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தரணிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டார். அவர், பொதுமக்களுடன் கலந்துரையாடி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசு துறைகள் இணைந்து சுகாதார பரிசோதனை நடைபெற்றது.


