News April 3, 2025
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 11, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுரை

சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பகிர்ந்துள்ளது. இரவு நேரங்களில் மற்றொரு வாகனத்தை முந்தும்போது அல்லது நாம் செல்லும் வழித்தடத்தில் (Lane) இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாறும்போது சரியான திசையில் இண்டிக்கேட்டரை (Indicator) ஒளிரச் செய்ய வேண்டும் என்றும், இது நமக்கும், நம்மால் மற்றவர்களுக்கும் விபத்து ஏற்படாமல் தவிர்த்திடும் என்று குறிப்பிட்டுள்ளது.
News April 11, 2025
நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் விழாவில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி, கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் இளம்பகவத் உடனிருந்தனர்.
News April 10, 2025
பல்லாக்கு கட்டிடம் கனிமொழி எம்.பி. திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் பன்னீர் குளத்தில் உள்ளூர் வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.