News April 3, 2025

50 வயது தாய்க்குப் பதிலாக SSLC தேர்வு எழுதிய மகள் கைது!

image

தாய்க்குப் பதிலாக 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மகள் போலீஸில் சிக்கியுள்ளார். நாகையில், நேற்று ஆங்கிலத் தேர்வின்போது தனித் தேர்வர்கள் பிரிவில் ஒரு பெண் மாஸ்க் அணிந்தவாறு அமர்ந்துள்ளார். சந்தேகமடைந்த அறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தபோது இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. நாகை GHஇல் சமையலராக இருக்கும் 50 வயது சுகந்தியின் பதவி உயர்வுக்காகப் பாசத்தில் மகள் இதை செய்துள்ளார். அன்புக்காக என்றாலும் குற்றம் தானே?

Similar News

News March 6, 2026

ரெடியா மக்களே? ஜூலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

image

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஜூலை 17-ல் தொடங்குகிறது. இப்பணிகள் 45 நாட்கள்(ஆக.30 வரை) நடைபெறும் என தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு திட்டங்களை வகுக்கவும், செயல்படுத்தவும் எடுக்கப்படும் இந்த கணக்கெடுப்பில், வீட்டின் சூழல், சொத்துகள், வசதி தொடர்பான 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து குடும்பத்தினரும் ரெடியா இருங்க!

News March 6, 2026

முடி அதிகமா கொட்டுதா? இத சாப்பிட்டா போதும்!

image

முடி வளரவில்லை என்பதற்காக கண்ட கிரீம்களையும் தலைக்கு தேய்க்குறீங்களா? நீங்கள் எவ்வளவு செய்தாலும், சரியான உணவு முறையை பின்பற்றாத வரை உங்களுக்கு எந்த ரிசல்ட்டும் கிடைக்காது என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் முட்டை, கேரட், சக்கரவள்ளி கிழங்கு, நெல்லிக்காய் & வாரத்திற்கு 2 முறை கீரை சாப்பிடுங்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.

News March 6, 2026

திமுக மீது அதிருப்தியில் இருக்கிறதா விசிக?

image

திமுக கூட்டணியில் உள்ள விசிக இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற முயற்சித்து வருகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என திமுக நிராகரிப்பதால், தொகுதிகளை குறைத்தால் 1 ராஜ்யசபா சீட் வேண்டும் என டீலிங்கை மாற்றிப்பார்த்ததாம். ஆனால் விசிக கேட்ட 2 டிமாண்டுகளுக்கும் திமுக பிடிகொடுக்காமல் இருப்பதால் விசிக கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!