News April 3, 2025
நெல்லை வழியாக கட்சிக்குடா ரயில் இயக்க வலியுறுத்தல்

நெல்லை வழியாக நாகர்கோவில் – கச்சிகுடா இடையே இயக்கப்பட்ட வாராந்திர பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் அல்லது ஆந்திர மாநிலம் சரளபள்ளிக்கு நெல்லை வழியாக இயக்கப்படும் ரயிலை இருவழிப் பாதையில் இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 28, 2025
நெல்லையில் பயங்கரம்., தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை!

விக்கிரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (47). இவர் மைக்செட் அமைத்துக்கொடுக்கும் தொழிலாளியாக இருந்தார். இவர் நேற்றிரவு அதே பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தவலறிந்து வந்த அம்பை போலீஸார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
நெல்லையில் குவிக்கப்படும் போலீஸார்!

ஜன. 1ம் தேதி உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. நெல்லை மாநகர் பாளை, முருகன் குறிச்சி, டவுன், தச்சநல்ல்லூர் உள்ளிட்ட பகுதியில் தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். அன்றைய தினம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மாநகரில் 500 போலீசாரும், மாவட்டத்தில்1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 28, 2025
நெல்லை: ஆட்டோ திருடிய இளைஞர் கைது

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியை சேர்ந்தவர் துரை பாண்டி (43). இவரது லோடு ஆட்டோவை தனது இரவு வீட்டு முன் நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அது காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து இவர் அளித்த புகாரின் படி லோடு ஆட்டோவை திருடி சென்ற தென்காசி மாவட்டம் கருவந்தா சோலைச்சேரியைச் சேர்ந்த தீரன் மாடசாமி (37) என்பவரை நேற்று பாளை போலீசார் கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


