News April 3, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க…
Similar News
News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி உடையவர்கள் 29.8.25-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (அ) தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 40 இருசக்கர வாகனங்கள் ஒரு 4 சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்களை 14.8.2025-ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7904136038, 9498162279, 9787658100 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.