News April 3, 2025

வேலூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடை, ரெயின் கோர்ட்டை கொண்டு செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News October 28, 2025

வேலூர்: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்!

image

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 28, 2025

வேலூர்: முதியவர் தற்கொலையால் பரபரப்பு

image

வேலுார் அலமேலுமங்காபுரம், பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(60). இவருடைய மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாசுதேவன் நேற்று (அக்.27) காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த விருதம்பட்டு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News October 28, 2025

வேலூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அவலம்

image

வேலுார் மாவட்டம், வசந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், எஸ்.பி., அலுவலகத்தில் தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி பாகாயத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும். பின், அவர் மைத்துனரின் ஆதரவால் பெண்ணின் குறைவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வேலுார் வடக்கு போலீசார் பெண் அளித்த புகாரின் பெயரில் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!