News April 3, 2025

பெரியகுளத்தில் பயங்கரம் – சிறுவன் கொலை

image

பெரியகுளத்தை சேர்ந்த ஆனந்தி(43) தனது தம்பி பாண்டீஸ்வரன்(33), மகன் நிஷாந்த்(14) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்யும் பாண்டீஸ்வரன் ஏப்ரல்.1 அன்று மது அருந்த பணம் கேட்டு ஆனந்தியிடம் தகராறு செய்துள்ளார். பணம் தரமறுத்த ஆனந்தியையும் சிறுவன் நிஷாந்தையும் இரும்பு கம்பியால் பாண்டீஸ்வரன் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான். போலீசாருக்கு பயந்து பாண்டீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News March 8, 2026

தேனி: வெற்றியை நிர்ணயிக்கும் இளம் வாக்காளர்கள்

image

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும், 18 முதல் 19 வயது உட்பட்ட 19,259 இளம் வாக்காளர்கள் உள்ளனர் அதேபோல் 20 வயது முதல் 29 வயது உட்பட்ட 1,87,753 வாக்காளர்களும், அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட 2,02 ,188 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 8, 2026

தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

அம்மச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் ஜெயஸ்ரீ (19) இளங்கோவனின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்து சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த ஜெயஸ்ரீ நேற்று (மார்.7) வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 8, 2026

தேனி: வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழப்பு.!

image

கோம்பை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜா (38). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (மார்ச்.6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!