News April 3, 2025

பெரியகுளத்தில் பயங்கரம் – சிறுவன் கொலை

image

பெரியகுளத்தை சேர்ந்த ஆனந்தி(43) தனது தம்பி பாண்டீஸ்வரன்(33), மகன் நிஷாந்த்(14) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்யும் பாண்டீஸ்வரன் ஏப்ரல்.1 அன்று மது அருந்த பணம் கேட்டு ஆனந்தியிடம் தகராறு செய்துள்ளார். பணம் தரமறுத்த ஆனந்தியையும் சிறுவன் நிஷாந்தையும் இரும்பு கம்பியால் பாண்டீஸ்வரன் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான். போலீசாருக்கு பயந்து பாண்டீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News November 13, 2025

தேனியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 13, 2025

தேனி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY!

image

தேனி மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <>கிளிக்<<>> செய்து சுயகர்ப்ப பதிவை தேர்ந்தெடுத்து
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News November 13, 2025

தேனி: நெஞ்சுவலியால் ஒருவர் தற்கொலை

image

கம்பம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என டாக்டர் அறிவுறுத்திய நிலையிலும் அசோகன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. வலி பொறுக்காமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்கு (நவ.12) பதிவு.

error: Content is protected !!