News April 3, 2025
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று கொடியேற்றம்

ஸ்ரீவி ஆண்டாள் – ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருக்கல்யாண திருவிழா இன்று(ஏப்.3) காலை 10.35 க்கு மேல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்க உள்ளது. ஏப்.11 ஆம் தேதி காலை செப்புத் தோரோட்டமும், இரவு இரவு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
Similar News
News November 2, 2025
சிவகாசியில் இலவச கண் சிகிச்சை முகாம்

சிவகாசியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று(நவ.02) நடைபெற உள்ளது. SBJ கண் மருத்துவமனை & புதுத்தெரு 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் சேவுகன் இணைந்து நடத்தும் இந்த முகாம் புதுத்தெரு பேச்சிமுத்து காம்ப்ளக்ஸ் அருகில், 46வது வார்டு திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கண் சார்ந்த பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதால் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
சிவாகசி: புதிய ரவுண்டானவால் சிக்கல்

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் GH நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News November 1, 2025
விருதுநகர்: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

விருதுநகர் மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ. 25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <


