News April 2, 2024
அரசியல் ஆதாயம் தேடவே கச்சத்தீவு விவகாரம்

அரசியல் ஆதாயம் தேடவே கச்சத்தீவு விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘தேர்தல் வருவதால் மீனவர்கள் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே பாஜக கச்சத்தீவு விவகாரத்தை பேசுகிறது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது அவர்கள் கவலைப்படவில்லை. தற்போது பாஜக கச்சத்தீவு விவகாரத்தை பேசி வருவது வேடிக்கையாக உள்ளது’ என விமர்சித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
திமுகவில் இணைகிறாரா தங்கமணி? பரபரப்பு அறிக்கை

EPS-ன் நம்பிக்கைக்குரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணையவிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, தனது உயிர் மூச்சு இருக்கும்வரை அதிமுகவில்தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். தான் செத்தாலும் உடலில் அதிமுக கொடியைத் தான் போர்த்த வேண்டும் என அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
News August 13, 2025
இந்தியா பிடிவாதம் காட்டுகிறது: அமெரிக்கா

வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா கொஞ்சம் பிடிவாதம் காட்டுவதாக அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் விமர்சித்துள்ளார். வரும் அக்டோபர் மாதமே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து
கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுத்ததாக கூறி, இந்திய பொருள்களுக்கு டிரம்ப் 50% வரிவிதித்திருந்தார்.
News August 13, 2025
உடலுறுப்புகளை தானம் செய்ய இன்றே முடிவெடுங்கள்!

‘இறந்தும் வாழ்கிறார்’ என்ற சொல்லே நாம் வாழ்ந்ததற்கான அடையாளம். இதற்கு நமது நன்மை மிகுந்த செயல்பாடுகள் ஒரு அடையாளமாக இருந்தாலும், இறப்பின் விளிம்பில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் உடலுறுப்பு தானம் நமக்கு மேலும் புகழ் சேர்க்கும். உடலுறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்ற முன்னெடுப்பும் தமிழகத்தில் உள்ளது. உடலுறுப்பு தான தினமான இன்று, உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வாருங்கள்!