News April 3, 2025
கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்க அந்த மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும்வரை பைக்குகளை வணிக போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனவும் கூறியுள்ளது.
Similar News
News December 16, 2025
வாசலை அலங்கரிக்கும் ஸ்பெஷல் மார்கழி கோலங்கள்!

பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடுவது வழக்கம். அதிகாலையில் கோலமிட்டு இறை வழிபாடு செய்தால் நமது விருப்பங்கள் நிறைவேறுவதோடு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள கர்ம வினைகள் அகலும் என நம்பப்படுகிறது. அப்படியாக, வீட்டு வாசலில் போடக்கூடிய சில எளிய கோலங்கள் இங்கு போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து வீட்டிலும் முயற்சிக்கவும்..
News December 16, 2025
அடுத்த தலைமுறையை அழிக்கும் திமுக: H.ராஜா

TN-ல் 55 மாதங்களில் 6,700 படுகொலைகள் நடந்துள்ளதாக H.ராஜா சாடியுள்ளார். இவை அனைத்தும் மது, போதை வஸ்துகளால் நிகழ்ந்தவை எனவும், போதைப்பொருள் விற்பனையில் TN முதலிடத்தில் உள்ளதாகவும் சாடினார். திமுக EX நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்த தலைமுறையை அழிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.


