News April 3, 2025

வக்கீலை வெட்டிய இருவருக்கு 1 ஆண்டு சிறை

image

அம்பை அருகே கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரியப்பனை கடந்த 2021-ஆம் ஆண்டு இடப்பிரச்சனை சம்பந்தமாக அவரை அரிவாளால் வெட்டி தாக்கினர். இந்த வழக்கு அம்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது குற்றவாளியான வினோத் என்ற உலகநாதன் (29) பூதபாண்டியன் (58)ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News November 6, 2025

நெல்லை காவல் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் கார்த்தி மணி உத்தரவுபடி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை இரவு காவல் பணியில் செயல்படும் அதிகாரிகள் காவல் நிலைய பகுதி வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News November 5, 2025

நெல்லை: அன்புமணி மீது போலீசார் வழக்கு பதிவு

image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த அக்டோபர் 7ம் தேதி நெல்லைக்கு வருகை தந்தார் அவர் சிந்து பூந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை சென்று அங்கே ஆற்றைக் காப்பாற்ற கோரி கோஷமிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் முறையாக அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அன்புமணி உள்ளிட்ட 4 பேர் மீது நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 5, 2025

கை துண்டிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை

image

களக்காடு பத்மநேரியைச் சேர்ந்த இசக்கி என்ற 21 வயது இளைஞர் இடது கை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவ அலுவலர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து மீண்டும் கையை வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர் என டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிகிச்சை அளித்த டாக்டர்களை அவர் பாராட்டினார்.

error: Content is protected !!