News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News February 20, 2026
திமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

தமிழகம் & புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் மேலாண்மை & ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்டவற்றை புதுச்சேரி காங்., மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச மதிமுகவும் குழு அமைத்துள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
News February 20, 2026
மோடி பெயர் சொல்லி நயினாருக்கு CM பதில்!

அதிரடி விவாதங்கள் நடைபெறும் TN சட்டமன்றத்தில் அவ்வபோது சிரிப்பலைகளும் எழுவதுண்டு. அதன்படி மகளிர் உரிமை தொகை ₹5,000 வழங்கப்பட்டது குறித்து நயினார் பேசினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், இதை பற்றி நீங்கள் அளித்த பேட்டியில், ‘மோடி மஸ்தான் வேலை மாதிரி இருக்கே’ என்றீர்கள். PM மோடியை தான் சொன்னீர்களா என்று தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூற, எதிர்க்கட்சி MLA-க்கள் உள்பட அவையில் சிரிப்பலை எதிரொலித்தது.
News February 20, 2026
விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள்: செளமியா

நம்முடைய அப்பா, கணவர், அண்ணன், தம்பி, மகன் என அனைவரையும் TN அரசு மதுவுக்கு அடிமையாக்கியுள்ளது என செளமியா அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். வேலூரில் பேசிய அவர், டோல்கேட்களில் வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள்; ஆனால் கட்சியினர், அரசு அதிகாரிகள் ப்ரீயாக செல்கிறார்கள் என்றும், இதை தடுக்க TN அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.


