News April 2, 2025

ஏப்ரல் 8இல் விலை உயர்வு.. தேதி குறித்த மாருதி சுசூகி

image

கார்களின் விலையை வரும் 8ஆம் தேதி உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரியில் விலையை மாருதி சுசூகி உயர்த்தியது. இதே காரணத்திற்காக பிராங்ஸ் மாடல் கார் விலை ரூ.2,500, டிசைர் எஸ் விலை ரூ.3,000, XL6, எர்டிகா விலை ரூ. 12,500, வேகன் ஆர் விலை ரூ.14,000, இகோ விலை ரூ.22,500, கிரான்ட் விடாரா விலை ரூ.62,000 என உயர்த்த இருப்பதாக கூறியுள்ளது.

Similar News

News January 20, 2026

ரூ.4.15 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்து சாதனை

image

2025-ல் இந்தியா ரூ.41.5 கோடிக்கு எலக்ட்ரானிக் பொருள்கள் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி அதிகரிப்பால், நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி, அந்நியச் செலாவணி வரத்தும் மேம்பட்டுள்ளது என்றும், 4 செமி கண்டக்டர் ஆலைகள் வணிக ரீதியான உற்பத்தியை தொடங்குவதால் 2026-லும் இந்த வளர்ச்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

News January 20, 2026

இனிமேல் அமைதியை பற்றி யோசிக்க மாட்டேன்: டிரம்ப்

image

8 போர்களை நிறுத்த நடவடிக்கை எடுத்தும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில், நோபல் பரிசு கிடைக்காததால் இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை இல்லை. அமெரிக்க நலனை பற்றி மட்டுமே சிந்திக்க போவதாக தெரிவித்துள்ளார்.

News January 20, 2026

2047-குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: SBI

image

இந்தியா பொருளாதார ரீதியாக ஜெட் வேகத்தில் வளர்ந்து வருவதாக சமீபத்திய SBI அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2028-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் ‘உயர் நடுத்தர வருமானம்’ கொண்ட நாடுகளின் பட்டியலில் இது சேரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த நாடாக’ இந்தியா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!