News April 2, 2025
ஏப்ரல் 8இல் விலை உயர்வு.. தேதி குறித்த மாருதி சுசூகி

கார்களின் விலையை வரும் 8ஆம் தேதி உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரியில் விலையை மாருதி சுசூகி உயர்த்தியது. இதே காரணத்திற்காக பிராங்ஸ் மாடல் கார் விலை ரூ.2,500, டிசைர் எஸ் விலை ரூ.3,000, XL6, எர்டிகா விலை ரூ. 12,500, வேகன் ஆர் விலை ரூ.14,000, இகோ விலை ரூ.22,500, கிரான்ட் விடாரா விலை ரூ.62,000 என உயர்த்த இருப்பதாக கூறியுள்ளது.
Similar News
News November 8, 2025
அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி: வீரலட்சுமி

தவெக செய்த ரெளடிசமே கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம் என தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி சாடியுள்ளார். அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி என விமர்சித்த அவர், களத்தில் நின்று மக்களை காப்பாற்றுபவர்களே நிஜ ஹீரோ என்றும், கரூர் துயருக்கு பிறகு தவெகவில் அனைவருமே ஓடி ஒளிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்காக புரட்சிகரமான போராட்டம் நடத்தி, விஜய் சிறை செல்ல தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
News November 8, 2025
சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா, இறுகப்பற்று படங்களில் கவனம் ஈர்த்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை போட்டோஷூட் பிரியர் என்றே சொல்லலாம். வாரத்திற்கு 2-3 முறை புது புதிதாக போட்டோக்களை SM-ல் பதிவிடுவார். இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சற்று கவர்ச்சிகரமான ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை SM-ல் அவர் பதிவிடவே சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டுகிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.
News November 8, 2025
போனுக்கு அடிமையானால் இப்படித்தான் மாறுவீர்கள்!

ஒருவர் நீண்ட நேரமாக ஒரு இடத்தில் இருந்து நகராமல், போனையே பார்த்து கொண்டு இருந்தால், அவர் 25 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி உருமாறுவார் என்பதை WeWard எனும் ஆப், போட்டோவாக வெளியிட்டுள்ளது. WHO உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களிடம் தரவுகள் பெறப்பட்டு, AI மூலம் இந்த போட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. கூன் விழுவது, முடி உதிர்வது, – வயதுக்கு மீறிய தோற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


