News April 2, 2025
ராமரை பாடிக் கொண்டே உயிரை விட்ட பிரபலம்

தமிழில் கம்பராமாயணம் போல், ஹிந்தியில் ராமரின் வரலாற்றை சொல்வது துளிசிதாசரின் ராம சரித மானஸ். இதுபற்றி சொற்பொழிவு ஆற்றுவதில் பிரபலமானவர் ஒடிசாவை சேர்ந்த பேரா.கோபால் பிரசாத் பேஜ். சப்ரங் என்ற இடத்தில் கோயில் திருவிழாவில் 3 நாள் சொற்பொழிவு நிகழ்த்த சென்ற கோபால் பிரசாத், 2-ம் நாளில் மேடையில் ராமரின் புகழைப் பேசிக் கொண்டிருந்தபோதே, சுருண்டு விழுந்து இறந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Similar News
News March 17, 2026
விவாகரத்து.. த்ரிஷா ஓபன் டாக் VIRAL

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கிற்கிடையே, த்ரிஷாவின் பதிவுகள் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், 2016-ல் விவாகரத்து பற்றி த்ரிஷா பேசியது தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், விவாகரத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என கூறியுள்ளார். மேலும் தான் திருமணம் செய்வதற்கு முன்பு 100 முறை யோசிப்பேன், ஏனென்றால் தான் வேறொருவரை காயப்படுத்தவோ (அ) மகிழ்ச்சியில்லா வாழ்க்கையை வாழவோ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
தவெகவில் இணைந்தார் மதிமுக மாவட்டச் செயலாளர்

தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், மதிமுக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் சங்கேஷ்வரன் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். அதேபோல், சேலம் மாநகர செயலாளர் அருள்மாது, மாவட்ட பிரதிநிதிகள், ரஜினிகாந்த், நாகேந்திரன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களை அருண்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
News March 17, 2026
மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல்லை நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.


