News April 2, 2025

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்ரூ.538 கோடி கூட்டுறவு கடன் 

image

2024-25ம் ஆண்டுக்கு 585 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 24 வரை ரூ.538.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 4312 19 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 14, 2026

இருள் சூழ்து காணும் தஞ்சை பெரிய கோயில் கோபுரம்

image

தஞ்சை பெரிய கோயில் கோபுர கலசத்தில் உச்சியில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக தஞ்சையின் எந்த ஒரு பகுதியும் இருந்தாலும் கோபுர கலசத்தை பார்க்க முடியும். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விமான கோபுரத்தின் உச்சியில் உள்ள விளக்கு எரியவில்லை. இதனால் கோயிலில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே விளக்கை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News March 14, 2026

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் பாபு. கொத்தனாரான இவர் வீட்டு வாசலில் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்த 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பெரிய கேரம் போர்டு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

News March 14, 2026

தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices<<>>.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!