News April 2, 2025
மீண்டும் ரயில் தடம் புரண்டது

ஆந்திராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து சம்பல்பூர் சென்ற நாகவள்ளி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயநகரம் அருகே தடம்புரண்டது. அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் ஒடிஷாவில் ரயில் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 25, 2026
19 வருட IPL-ல் யாரும் நெருங்க முடியாத சாதனை!

19 வருட 19 வருட IPL வரலாற்றில், பைனலில் தோற்ற அணியில் இருந்து ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருது பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை கும்ப்ளே(RCB) தன்வசம் வைத்துள்ளார். 2009-ம் ஆண்டு பைனலில், முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் 143 ரன்கள் எடுத்தது. கும்ப்ளே 4 ஓவர்களில் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். 6 ரன்கள் வித்தியாசத்தில் RCB தோற்றாலும், கும்ப்ளே ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருதை வென்றார்.
News March 25, 2026
₹3,500 ஆக உயர்வு.. புதிய தேர்தல் வாக்குறுதி

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ₹3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. அதேபோல், கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹4,500 ஆக நிர்ணயம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான ஆதார விலை தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ₹2,500 ஆக உள்ளது.
News March 25, 2026
ஈரான் – USA போர்.. முக்கிய பங்கு வகிக்கும் பாகிஸ்தான்

மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்ட நிலையில், அதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் முன்னேறியுள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த US துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு 15 அம்ச திட்டத்துடன் விரைவில் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே இஸ்லாமாபாத்தில் வைத்து பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யவுள்ளது.


