News April 2, 2025
பணியின் இறுதிநாளில் உயிரை விட்ட சோகம்…!

ஜார்கண்ட் ரயில் விபத்தில் உயிரிழந்த லோகோ பைலட்டுக்கு அன்றுதான் கடைசி பணி நாள் என்ற சோக செய்தி வெளியாகியுள்ளது. சரக்கு ரயில்கள் நேற்று மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்கேஸ்வர் மாலும் ஒருவர். மகிழ்ச்சியுடன் ஓய்வு நாட்களை கழித்திருக்க வேண்டிய அவர், இப்போது உயிருடன் இல்லை. பணியின் கடைசி நாள், அவரது வாழ்வின் கடைசி நாளாக மாறியுள்ளது.
Similar News
News September 23, 2025
Sports Roundup: பலோன் டி’ஓர் விருது வென்ற டெம்பலே

*இந்தியாவுக்கு எதிரான 2-வது அன் அபிசியல் டெஸ்டில் ஆஸி., முதல் நாள் முடிவில் 350 ரன்கள் எடுத்துள்ளது. *2025-ம் ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றுள்ளார். * ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கு இந்தியாவின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம். *WI-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலை துணை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு. *சர்ரே கவுண்டி அணிக்காக இந்தியாவின் ராகுல் சாஹர் விளையாடவுள்ளார்.
News September 23, 2025
உங்கள் கல்லீரலை காக்க… இதையெல்லாம் கவனியுங்க

உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரைக்கு நோ *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்க *பெயின் கில்லர்ஸ் மருந்துகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட்-ஐ தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும். SHARE IT
News September 23, 2025
விஜய்யை துரத்தும் IT வழக்கு

புலி படத்திற்காக பெறப்பட்ட ₹15 கோடியை மறைத்ததாக, 2022-ல் ₹1.50 கோடி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து HC-ல் விஜய் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில், இது காலதாமதமான நடவடிக்கை எனவும், எனவே IT பிறப்பித்த உத்தரவை செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அபராதம் விதித்தது சரிதான் என IT தரப்பு கோரியது. இதனையடுத்து அக்.10-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.