News April 2, 2024
500 ரூபாய் 5 லட்சம் ஆன கதை

மருத்துவர் தன்மயி மோதிவாலா என்பவர் X தளத்தில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவருடைய பெற்றோர் 1994ஆம் ஆண்டு ₹500 மதிப்பிலான SBI வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கின்றனர். அதன்பின், அவர்களே அதனை மறந்து போயிருக்கின்றனர். எதேச்சையாக அந்த பங்குகள் மருத்துவர் மோதிவாலாவிடம் கிடைக்க, அதன் மதிப்பு தற்போது ₹5 லட்சம் என்று தெரிய வந்துள்ளது. பங்குச் சந்தை முதலீட்டின் சக்தியை பாருங்க.
Similar News
News January 23, 2026
வாய் துர்நாற்றம் வருதா?

வாய் துர்நாற்றம் பெரும்பாலும் வாய் & பல் பராமரிப்பு இல்லாதது, செரிமான கோளாறு, கல்லீரல், சிறுநீரக உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறதாம். இதற்கு: *நன்றாக பல் துலக்க வேண்டும். *நாக்கை வழித்தெடுத்து சுத்தம் செய்ய வேண்டும். *வாயை கொப்பளித்தல் அவசியம். * வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்க புளிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். *மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடவும்.
News January 23, 2026
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெல்லிகோ நகரில், அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சையில் உள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து ஆஸி.,யையும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிரவைத்து வருகிறது.
News January 23, 2026
இனி Wifi வேகம் அதிகரிக்கும்!

இந்திய தொலைத்தொடர்புத் துறை, மே 2025ல் 6 GHz அலைவரிசையில் 500 MHz அலைக்கற்றையை Wi-Fi சேவைகளுக்காக பொது பயன்பாட்டிற்கு விடுவிப்பதாக முன்மொழிந்தது. இந்நிலையில், 6 GHz Wi-Fi பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இனி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் Wifi வேகம் அதிகரிக்கும். மேலும், இதை உபயோகிக்க உரிமம் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.


