News April 2, 2025

தமிழில் பெயர் பலகை கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி 

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகை கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். வரும் மே.15க்குள் இதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர் அபராதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமென்டல சொல்லுங்க. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இதனை தெரியப்படுத்துங்கள். 

Similar News

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 04 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

இளம்பெண்ணை கடத்திய சென்னை போலீஸ்காரர்

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

News April 7, 2025

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

image

நாட்டேரி கிராமத்தைச் சோர்ந்தவர் ஜெயலட்சுமி (35). இவரது மகன் நவீன்குமாா் (17). இவா் செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். நவீன்குமாா் சரிவர தொழிற்பயிற்சி நிலையத்துக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை இவர் தாய் கண்டித்ததால் மனமுடைந்த நவீன்குமாா், நேற்று (ஏப்ரல்.06) வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

error: Content is protected !!