News April 2, 2025
வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அதேபோல உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். மே.15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
கோவையில் ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “Google Gemini” பெயரில் வைரலாகும் “Nano Banana AI” ட்ரெண்ட் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி போலியான இணையதளம், செயலிகள் மூலம் புகைப்படம், தனிப்பட்ட விவரங்கள் பதிவேற்றினால், வங்கி கணக்கு போன்ற தனிநபர் தகவல்கள் திருடப்படலாம் என, கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
News September 18, 2025
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சிட்கோ, சுந்தராபுரம், போத்தனூர், ஈச்சனாரி, குறிச்சி, எல்.ஐ.சி காலனி, குறிச்சி ஹவுசிங் யூனிட், மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒரு பகுதி, ஆகிய பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.
News September 18, 2025
நாலாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு

கோவை சிங்காநல்லூர் சேர்ந்தவர் விவேகன் மணி (72) பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவர் நேற்று காந்திபுரம் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் 4 அடி உயர ஸ்டாண்டில் நின்று பெயிண்ட் அடிக்கும் போது திடீரென்று தவறி கிழே விழுந்து உயிரிழந்தார் பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.