News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News December 31, 2025
புத்தாண்டு முதலே சமத்துவம் பொங்கட்டும்: CM

தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக 2026 அமையும் என்று CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயக போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் ஆண்டாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். புத்தாண்டு தொடக்கம் முதலே சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 31, 2025
டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

டீ இல்லாத ஒருநாளை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஆனால், ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் ➤பதற்றம் குறையும் ➤டீஹைட்ரேஷன் பிரச்னைகள் குறையும் ➤செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும் ➤செரிமான பிரச்சனை சரியாகும். இந்த சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 31, 2025
பிரபல தமிழ் பாடகி காலமானார்

பருத்திவீரன் படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த இவர் பல கிராமிய பாடல்களை பாடி புகழ்பெற்றவர். இவர் மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கிராமப்புற பாடல்கள் பாடி ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். அதில் கலைமாமணியும் ஒன்று.


