News April 2, 2024
மருந்து, மாத்திரைகளின் விலை உயர்வு

அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்ததை தொடர்ந்து, பாராசிட்டமால், ஃபெர்னோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின் உள்பட 800 மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
Similar News
News April 6, 2026
CINEMA 360: இனிமே சிங்கிள் தான்.. ஸ்ருதிஹாசன்!

➤6 முறை காதலித்து காயமடைந்ததால், இப்போதைக்கு சிங்கிளாக இருக்க தீர்மானித்திருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார் ➤லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படம் ₹3 நாள்களில் ₹3.07 கோடி வசூலித்துள்ளதாம் ➤மோகன்லால் நடித்து நேரடியாக OTT-ல் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது ➤தனுஷுடனான நட்பு முறிந்ததை பலவீனமாக பார்ப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
பாஜகவுக்கு முக்கியமான நாள்.. அண்ணாமலை செய்த செயல்

பாஜகவின் 47-வது நிறுவன தினத்தையொட்டி, தனது இல்லத்தில் கட்சியின் கொடியை அண்ணாமலை ஏற்றியுள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், பாஜகவின் புகழ்பெற்ற பயணத்தை வடிவமைக்க உதவியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொடியை ஏற்றியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜகவின் கொடி தொண்டர்களின் வியர்வையையும், கடின உழைப்பையும், தியாகங்களையும் உள்ளடக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது!

சென்னையில் காய்கறிகள் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில், 1 கிலோ சாம்பார் வெங்காயம்- ₹10, பெரிய வெங்காயம்- ₹10, தக்காளி- ₹11, கேரட்- ₹20, கத்திரிக்காய்- ₹15, பீட்ரூட்- ₹15, பச்சை மிளகாய்- ₹25, முருங்கைக்காய்- ₹20 என விலை பாதியாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், இந்த விலை குறைவு தங்களுக்கு கவலையை கொடுத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


