News April 2, 2025
பிரதமர் வருகை.. ட்ரோன் பறக்கத் தடை – ஆட்சியர்

பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 29, 2025
மதுரை: பேச்சை மீறிய மனைவி: ஆசிட் குடித்து கணவர் தற்கொலை

மதுரை சிந்தாமணியை சேர்ந்த முருகானந்தம்(38) அப்பள கம்பெனி நடத்தி வருகிறார். இவர் மனைவி கோவிலுக்கு அழைத்து செல்லும்படி பலமுறை கூறியும், இவர் அழைத்து செல்லாததால் தன் தந்தையுடன் கோவிலுக்கு சென்றார். தன் பேச்சை மனைவி மீறியதால் மனமுடைந்த கணவர்
ஆசிட்டை குடித்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு நேற்று உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 29, 2025
மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
A – 26 என்றால் மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News December 29, 2025
மதுரையில் ஜோதிடருக்கு பீர் பாட்டிலால் குத்து

மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் ஜோதிடர் மணிகண்டன்(35). அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் விளையாடிய போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு(24) பீர் பாட்டிலுடன் அவர் வீட்டிற்கு சென்று பாட்டிலை உடைத்து சரமாரியாக அவரை குத்தினார். திருப்பாலை போலீசார் மணிகண்ட பிரபுவை இன்று கைது செய்தனர்.


